“பதிவுகள்”
(அறிவினை விரிவுசெய்வோம் அதனைப் பதிவுசெய்வோம்)


அன்புடையீர் வணக்கம்,

நம் கல்லூரியில் “பதிவுகள்” என்ற மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றம் வாரந்தோறும் புதன் கிழமை அன்று மாலை  4 மணிமுதல் 5 மணிவரை நடைபெறும். இங்கு ஆசிரியர்கள் பயனுள்ள நல்ல சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளலாம். கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, இணையம், உளவியல், சமூகவியல், சுற்றுச்சூழலியல், கல்வெட்டியல், கோயில்கலை, கற்பித்தல் உத்திகள், ஆய்வுத்திட்டங்கள், போட்டித்தேர்வுகள், ஊரின் சிறப்பு என பார்த்த, கேட்ட, படித்த, இரசித்த நல்ல சிந்தனைகளை இங்கு பகிர்ந்துகொள்ளலாம். விருப்பமுடையவர்கள் தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு ந.பரமசிவம் அவர்களிடம் தம் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மன்ற ஒருங்கிணைப்பாளர்

முனைவர் இரா.குணசீலன்                                                            முதல்வர்.
(தமிழ் விரிவுரையாளர்)