04.09.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் கணினித்துறை விரிவுரையாளர் திருமதி.ச.கற்பகச்செல்வி அவர்கள் “வரலாற்றில் தைமூர்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். 

இந்தியா மீது இதுவரை நடந்த மொகலாயர்களின் படையெடுப்புகள் குறித்தும், தைமூர், கஜினிமுகமது, செங்கிசுகான் போன்றோரின் போர் உத்திகள் குறித்தும், அக்கால செல்வநிலைகளைப் பற்றியும், ஆதாரங்களுடன் மிக அழகாக உரையாற்றினார். முதல்வர் அவர்களும் தாம் அறிந்த வரலாற்றுச் செய்திகளைச் சுவைபடப்  பகிர்ந்துகொண்டார்.