27.11.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் திரு.டி.இராசேந்திரக்குமார் அவர்கள் கணிதமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில் கணக்கதிகாரத்திலிருந்து பலாச்சுளைகளை எண்ணும் வழிமுறைகளையும் பூசணிவிதைகளை எண்ணும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். மேலும் இயற்கையும் கணிதமும், வேதகணிதம், வாழ்வியல் கணிதம் எனப் பலதுறைகளிலும் கணிதத்தின் பங்களிப்பை அழகாக எடுத்துரைத்தார்.