24.07.13 அன்று மாலை 4 மணிக்கு
நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் உயிர்த்தொழில்நுட்பத்துறை விரிவுரையாளர்
திரு. எம்.ஆர்த்தி அவர்கள் “இசையும் மனிதவாழ்வியலும்” என்ற தலைப்பில் தம்
கருத்துக்களைப் பதிவு செய்தார்.
- ஒலி, ஒலிபரவல், ஒலியின் அளவு, ஒலியின் தரம் ஆகியவற்றை அறிவியல்
அடிப்படையில் விளக்கினார்,
- இசையென்றால்
என்ன? என்று விளக்கி, குறள், புறப்பாடல்களில் இடைம்பெற்ற இசைகுறித்த
செய்திகளை எடுத்துரைத்தார்.
- குழலும் கிருஷ்ணனும், உடுக்கையும் சிவனும்,
வீணையும் சரசுவதியும் என கடவுளரோடு இருக்கும் இசைக்கருவிகளின் மரபுகுறித்துப்
பேசினார்.
- நரம்பு, துளை, தோல், சலதரங்கம், போன்ற
இசைக்கருவிகளின் வளர்ச்சிகுறித்தும் இசைமருத்துவம் குறித்தும் அழகாகச்
சொன்னார்.
- மனஅழுத்தம் நீங்க இசை எவ்வாறு பயன்படுகிறது என்பதை நன்றாக எடுத்துரைத்தார். பேராசிரியர்களும் தம் இசைகுறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
0 கருத்துகள்